திருப்பாவை
பாடல் 30
வங்கக்கடல்
கடைந்த மாதவனை கேசவனை
திங்கள்
திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப்
பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத்
தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை
முப்பதும் தப்பாமே
இங்குஇப்
பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண்
திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும்
திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.
பொருள்:
அலைகள்
நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி
என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, சந்திரனைப்
போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை
ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த
தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல் பாடி
பாமாலை தொடுத்திருக்கிறாள். இதனை படிப்பவர்கள், உயர்ந்த
தோள்களை யுடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை
உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின்
ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.
No comments:
Post a Comment