ஆடாதோடை ஓர் அற்புதமான
மூலிகைச்செடி..இதன் இலைகளுக்கு கபாதிக்கம், வாத தோஷம், அநேக விதமான சுரங்கள், சந்நிபாதம், வயிற்று நோய் ஆகியப் பிணிகளைப் போக்கும் வல்லமை உள்ளது...
மனிதருக்கு வியாதிகள்
அணுகாமல் காக்க,
இறைவன் அல்லது இயற்கை. மனிதர் வாழும் இடங்களில்
பல்வேறு அரிய பலன்கள் அளிக்கவல்ல மூலிகைகளை, படைத்தே
வைத்துள்ளது. நம் அருகில் வெகு சாதாரணமாக காணக்கிடைக்கும் குப்பைமேனி, நாயுருவி, போன்ற மாபெரும் சக்திமிக்க மூலிகைகளைப்போன்றே, சாதாரணமாக எங்கும் காணப்படும் மூலிகைதான், சித்தர்களால்
காயகற்ப மூலிகை எனப்போற்றப்படும் ஆடாதோடை.
மனிதர்களின் உடலில், எந்த வித வியாதிகளும் அணுகாமல், நரை, திரை மற்றும் மூப்பு போன்ற உடல்பிணிகளால் பாதிப்பு அடையாமல், பன்னெடுங்காலம் ஆரோக்கியமாக வாழ வழிசெய்யும் மூலிகைகளே, காயகற்ப மூலிகைகள் ஆகும்.
நீண்ட மாவிலை போல
பசுமையான இலைகளைக்கொண்ட ஆடாதோடை, வெள்ளை நிறத்தில்
பூக்களுடன் விளங்கும். அற்புத மூலிகை. ஆடாதோடை வளருமிடத்தில், அதிக அளவில் கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கி, ஆக்சிஜனை
பெருமளவில் வெளியிட்டு, மனிதர்களின் நல்வாழ்வுக்கு துணை செய்யும்
தன்மையுடையதாகையால், ஆடாதோடையை "ஆயுள் மூலிகை" என
அழைப்பர்..
மனிதர்களின் நோயணுகா
வாழ்வுக்கு நல்ல சுவாசமே, தீர்வாகும். நல்ல
சுவாசத்திற்கு, நுரையீரலின் செயல்பாடு இன்றியமையாததாகும். நுரையீரல் என்பது
மனிதனின் சுவாசம் மூலம் வரும் காற்றிலிருந்து, ஆக்சிஜனை
பிரித்து உடலில் பரவவைத்து, கார்பன் டை ஆக்சைடை
வெளியேற்றும். சீராக இயங்கும் நுரையீரலே, இரத்தத்தை
சுத்திகரித்து, மனித உடல் ஆயுளை அதிகரிக்கும் தன்மை வாய்ந்தது. அத்தகைய
நுரையீரலில் நெடுநாட்களாக சளி தேங்கி, நுரையீரல்
பாதிப்படைவதாலேயே,
ஆஸ்துமா, இருமல் உள்ளிட்ட
சுவாச பாதிப்புகள் ஏற்பட்டு, உடல் நலம் கெடுகின்றன.
அத்தகைய பாதிப்புகளை நீக்கி, நுரையீரலில் தேங்கியுள்ள
சளியை அகற்றி, சுவாசத்திற்கு உறுதுணை புரிந்து, நீண்ட ஆயுளை அடையவைக்கும் அற்புத மூலிகை, இந்த ஆடாதோடை
மூலிகை.
"ஆடாத உடலும் ஆடும், பாடாத வாயும்
பாடும்" எனும் சித்தர்களின் வாக்குக்கேற்ப, ஆடாதோடை மூலிகையை
முறையாக, உண்டுவர, உடல் நலம் தேறி, மனதில் உற்சாகம் பிறக்கும்.
கிராமங்களில், வயல் ஓரங்களில் வேலியை காக்கும் செடியாக, ஆடாதோடை அவற்றின்
பசுமையான இலைகளை,
கசப்புத்தன்மை காரணமாக, கால்நடைகள் உண்ணாததால், அதிக அளவில் பயனாகிறது.
சாலையோரங்களில் அதிக அளவில் காணப்படும், ஆடாதொடா
செய்லன்சியா எனும் தாவரவியல் பெயர்கொண்ட ஆடாதோடை. இலை, செடிகளின் பட்டை, வேர் மற்றும் இதன் மலர்களும் மருத்துவ குணங்கள்
நிரம்பியவை.
பொதுவான மருத்துவ
குணங்களாக, கோழை எனும் சளியை அகற்றும், வயிற்றில் உள்ள
நுண்ணிய புழுக்களை அழிக்கும், சிறுநீரை அதிகரித்து, உடல் வழிகளை போக்கும் தன்மைகள் மிக்கது.
ஆடாதோடையில் உள்ள முக்கிய
சத்தான வாசிசின்,
நுரையீரலில் உள்ள செல்களை சரிசெய்து, நுரையீரலின் சுருங்கி விரியும் தன்மையை சீராக்குவதால், ஆஸ்துமா, இருமல் சளி போன்ற சுவாசக்கோளாறுகளை சரியாக்குகிறது.
மேலும், ஆடாதொடையில் வைட்டமின் C சத்தும், வாசினால், ஆடாதோடின் மற்றும் கேலக்டோஸ் எனும் வேதிப்பொருள்களும் அதிக
அளவில் உள்ளன.
மார்பு வலிகளுக்கு
ஆடாதோடை முதலுதவி:
உடலில் அதிக
சளித்தொல்லைகள் காரணமாக, உடல் தசைகளில் வலி ஏற்படும், அந்த வலிகளைப் போக்க,ஆடாதோடை இலைகளை பொடியாக்கி, நீரில் கலந்து பருகிவர,தசை வலிகள் யாவும்
விலகிவிடும்.
எதிர்பாராத விதமாக மார் பயன்படுத்தும் முறைதொகு
ஆடாதோடை இலைகளைச் சுரசம்
செய்து (அதாவது அரைத்துப் பிழிந்து வடிகட்டிய சாற்றை, இரும்புக் கரண்டியைச் சூடாக்கிஅதில் தோய்த்து, தோய்த்து
சூடாக்குவது) கால் முதல் அரை தேக்கரண்டி தேன் கூட்டி தினமும் இரண்டு மூன்று வேளை
கொடுக்க கப சம்பந்தமான நோயைக் குணபடுத்தும்...இந்த சுரசத்தையே அதிகயளவில்
கொடுத்தால் வாய்க்குமட்டி வாந்தியாகி கபம் முழுதும் வெளிப்படும்...மற்றொரு முறையாக, ஒன்று இரண்டு தோலா எடையுள்ள ஆடாதோடை இலைகளை குறுக்க நறுக்கி ஒரு பழகிய
மட்பாண்டத்தில் போட்டு கால் படி நீர் விட்டு வீசம் படியாகச் சுண்டக்காய்ச்சி
வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்சு வீதம் தினமும் இரண்டு வேளை சிறிது
திப்பிலிச்சூரணமும்,தேனும் கூட்டிக் கொடுத்துவர இரத்தம்
தூய்மையாகும், கபம் கரையும், கஷ்ட சுவாசம் நிவர்த்தியாகும்...குழந்தைகட்கு
வயதுக்குத் தக்கவாறு ஆடாதோடை சுரசத்தை பத்து முதல் இருபது துளிகள் தேனுடன் கலந்து
கொடுக்கலாம்...இந்த மூலிகை பித்த சீதளத்தை மிக விரைவில் குணப்படுத்தும்
தன்மையுள்ளதாகையால் சுரநோய்கட்கும் சிறப்பாக ஆடாதோடை கியாழம் செய்து பயன்படுத்துவர்.
No comments:
Post a Comment