Monday 17 December 2018

வைகுண்ட ஏகாதசி அன்று செய்யவேண்டியதும் செய்யக்கூடாததும்





துப்புடையாரை அடைவதெல்லாம் சோர்விடத்துத் துணையாவரென்றே
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன் ஆனைக்கு நீ அருள் செய்தமையால்
எய்ப்புஎன்னை வந்துநலியும்போது அங்கு ஏதும் நானுன்னை நினைக்க மாட்டேன்
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன் அரங்கத் தரவணைப் பள்ளியானே!

பெருமாள்  குறித்து பாடப்பட்ட  நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் இப்படி கூறுகிறார் பெரியாழ்வார்.அதாவது, ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்வுற்ற காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை நம்பி வாழ்வது என்பது உலகத்தின் இயல்பே. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன். ஏனென்றால் 'ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா நீ. அதேபோல எனது கடைசி காலங்களில் ஒருவேளை நோயால் அவதிப்படும்போது,  உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன் என்கிறது பாடல் வரிகள்.

எனவே தேவரின் நாமத்தை சொல்வதால் கிடைக்கும் நன்மைகளை உணர்த்துகிறது இந்த பாடல். அப்படி தேவரின் நாமத்தை உச்சரிப்பதால் அளவற்ற நன்மைகள் கிடைக்கும். அதேசமயம் வைகுண்ட ஏகாதசி போன்ற புண்ணிய தினங்களில் உச்சரிக்கும் போது மேலும் அதிகமான பலன்கள் கிடைக்கும். ஏன் வைகுண்ட ஏகாதசிக்கு இவ்வளவு சிறப்பு என்பதை பார்க்கலாம்.

ஞான எந்திரியங்கள் 5.
கர்மேந்திரியங்கள்  5.
மனசு ஒன்றையும் சேர்த்து பதினொன்றையும் பெருமாளுடன் ஐக்கியப்படுத்தித் தியானம் இருப்பதே ஏகாதசி விரதம். உடலாலும் உள்ளத்தாலும் பெருமாளுடன் ஒன்றியிருப்பதே உபவாசம் அதாவது  (விரதம் மூலம் இறைவனிடம் நெருங்கி வருதலாகும்)
மாதம் தோறும் இரண்டு ஏகாதசிகள் வரும். ஒரு வருடத்தில் 25 ஏகாதசிகள் வருகின்றன. 'மாதங்களில் நான் மார்கழி' என்று சொன்ன மகாவிஷ்ணுவுக்குப் பிடித்தமான மார்கழி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி எல்லா ஏகாதசிகளிலும் முக்கியமானது.  இதைத்தான் 'வைகுண்ட ஏகாதசி'  விரதமென மக்கள் அனுஷ்டித்து வருகிறார்கள்.

வைகுண்ட ஏகாதசி விரதம் இருப்பது எப்படி?

வாழும் அவசர உலகில் மாதந்தோறும் வரும் ஏகாதசியை  அனுசரிப்பது மிகவும் நல்லது. பிரதமை திதியிலிருந்து பத்தாவது நாளான  தசமியிலும் துவாதசியிலும் ஒரே வேளை உணவைத்தான் உண்ணவேண்டும். ஏகாதசி நாளில் சூரிய உதயத்துக்கு முன்பாகவே எழுந்து நீராடி, பூஜையில் அமர்ந்து அந்தப்பரந்தாமனை மனதில் தியானித்து வழிபடவேண்டும். அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து பகவத் கைங்கர்யத்தில் ஈடுபட வேண்டும். முதியோர்கள் உடல் நலிவுற்றவர்கள்,  பூஜையில் வைத்து நிவேதனம் செய்யப்பட்ட பழங்களை சாப்பிடலாம்.

பகலில் தூங்காமல் இருந்து, அன்றன்றைக்கு உரிய வேலைகளை கர்மசிரத்தியோடு செய்து முடிக்க வேண்டும். இரவில் விழித்து பகவானின் புகழ் பாடும் பக்திப்பாடல்கள் மற்றும் பாசுரங்களைப் பாடிக்கொண்டு இறை சிந்தனையிலேயே இருக்க வேண்டும். கண்விழித்து இருந்து பகவானின்  நாமத்தைச் சொல்லும் பாடல்கள், பஜனைகள் செய்து, ஆன்மிகக் கதைகளைப் படித்துக்கொண்டோ பாராயணம் செய்து கொண்டோ மனதை ஒருங்கிணைக்க வேண்டும்.

ஶ்ரீ ரங்கம் தொடங்கி திருப்பதி வரை உள்ள வைணவக் கோயில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். இதில் பங்கேற்க லட்சக்கணக்கான மக்கள் இறைவனின் அருட்கடாட்சத்தைப் பெற வரிசையில் காத்திருந்து  சொர்க்க வாசல் வழியாகச் சென்று இறையருளைப் பெறுவார்கள். மறுநாள் துவாதசி நாளில்  காலைக் கடன்களை முடித்துவிட்டு விருந்தினர்களுக்கு, அகத்திக் கீரை, நெல்லிக்கனி, சுண்டைக்காய் ஆகியவற்றோடு அமுது படைத்து உண்ண வேண்டும்.

என்ன செய்யக்கூடாது?

இரவில் கண்விழித்திருக்க வேண்டும் என்பதற்காக தாயம் ஆடுவார்கள். அதற்கு பேசாமல் தூங்கி விடுவதே நன்று. ஏனெனில் எந்த வீட்டில் தாய சத்தம் கேட்கிறதோ, அந்த வீட்டில் லட்சுமி தேவி குடியிருக்க மாட்டாள். அந்த விளையாட்டின்போது, இதோ 2 போட்டு உன் தலையை கொய்கிறேன், 4 போட்டு உன் வெட்டுகிறேன் என கூறிக்கொள்வார்கள். ஒரு தெய்வத்திற்கு உகந்த நாளில் இப்படி அபச குண வார்த்தைகளை கேட்டால் எப்படி இறவனின் அருள் கிட்டும்? சினிமாவுக்கு செல்வார்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்துகொண்டே கண் விழித்திருப்பார்கள். இதுவும் தவறே. அதேபோல பரமபத விளையாட்டு ஆடும் வழக்கம் உள்ளது. இதையும் செய்யக்கூடாது.

ஏகாதசி அன்று உணவு அளிக்கவும் கூடாது. அந்த உணவை ஏற்கவும் கூடாது எனபது சாஸ்திர நியதி. ஏகாதசி நாளில் விரதம் இருப்பது நம்மைப் படைத்த இறைவனுக்கு நன்றிசெலுத்துவதாகும்.
இதனால் நம் மன அழுக்கைப் போக்கி எண்ணங்களை, தூய்மை அடைய செய்வது மிகவும் எளிதாகும். மனத்தூய்மை அடைந்தாலே, இனிமையான வாழ்க்கை  நமக்கு அமைந்திடும். மனம், வாக்கு செயல் மூன்றையும் ஒரே நிலையில் நிறுத்துவதுதான் ஏகாதசியின் நோக்கமாகும். மூன்றும் ஒரு நிலையில் இருக்கும்போது நாம் நினைத்த காரியம் எளிதாக நிறைவேறிடும்.

Tuesday 11 December 2018

Remedies Of Tinea Curis





கரும்பத்து கரும்படை நீங்கி நலம் பெற இதை செய்ங்கள் 

கரும்பத்து கரும்படை தொடை இடுக்கு அக்குள் பகுதிகள் பெண்களுக்கு இடுப்பில் பாவாடை கட்டும் தடம் கன்னம் கண்களுக்குக்கீழ் போன்ற பகுதிகளில் ஏற்படும். சிலர் சுயமாக மருந்துகடைகளில் கிடைக்கும் ஸ்டீரோயிட் கலந்த கீரிம்களை வாங்கி உபயோகிப்பார்கள். தற்காலிமாக அரிப்பும் மாறினாலும் கரும்படை மாறாது.
 இதற்கு எளிதான மருந்து இது. சிரமம் பாராமல் செய்து உபயோகித்தால் பூரண குணம் கிடைக்கும்.
கருமையான படை நீங்கி நலம் பெற
சீமை அகத்திப் பூ ........... இருபது கிராம்
மருதாணி இலைகள் அரைத்த விழுது ....ஒரு தேக்கரண்டி
பூண்டு .. இரண்டு பற்கள் .நறுக்கியது
மஞ்சள் தூள் ..... கால் தேக்கரண்டி
செக்கு நல்லெண்ணெய் ........... நூறு மில்லி
செக்கு நல்லெண்ணையை சூடேற்றி அதில் ஒவ்வொரு பொருளாகப் போட்டுக் கொதி வந்தபின் அடுத்த பொருளைப் போட்டு மிதமான சூட்டில் நன்கு தைலமாகக் காய்ச்சி இறக்கி வடி கட்டி ஆறவைத்து பாட்டிலில் சேமிக்கவும்
இந்த தைலத்தை பாதிப்பு உள்ள இடங்களில் இரவில் பூசி மறுநாள் காலை சீகைக்காய் கொண்டு கழுவி வர அனைத்து இடங்களிலும் உள்ள கருமபத்து கரும்படை குணமாகும்











மனிதருக்கு வியாதிகள் அணுகாமல் காக்க ஓர் அறிய மூலிகை







ஆடாதோடை ஓர் அற்புதமான மூலிகைச்செடி..இதன் இலைகளுக்கு கபாதிக்கம், வாத தோஷம், அநேக விதமான சுரங்கள், சந்நிபாதம், வயிற்று நோய் ஆகியப் பிணிகளைப் போக்கும் வல்லமை உள்ளது...
மனிதருக்கு வியாதிகள் அணுகாமல் காக்க, இறைவன் அல்லது இயற்கை. மனிதர் வாழும் இடங்களில் பல்வேறு அரிய பலன்கள் அளிக்கவல்ல மூலிகைகளை, படைத்தே வைத்துள்ளது. நம் அருகில் வெகு சாதாரணமாக காணக்கிடைக்கும் குப்பைமேனி, நாயுருவி, போன்ற மாபெரும் சக்திமிக்க மூலிகைகளைப்போன்றே, சாதாரணமாக எங்கும் காணப்படும் மூலிகைதான், சித்தர்களால் காயகற்ப மூலிகை எனப்போற்றப்படும் ஆடாதோடை.

மனிதர்களின் உடலில், எந்த வித வியாதிகளும் அணுகாமல், நரை, திரை மற்றும் மூப்பு போன்ற உடல்பிணிகளால் பாதிப்பு அடையாமல், பன்னெடுங்காலம் ஆரோக்கியமாக வாழ வழிசெய்யும் மூலிகைகளே, காயகற்ப மூலிகைகள் ஆகும்.

நீண்ட மாவிலை போல பசுமையான இலைகளைக்கொண்ட ஆடாதோடை, வெள்ளை நிறத்தில் பூக்களுடன் விளங்கும். அற்புத மூலிகை. ஆடாதோடை வளருமிடத்தில், அதிக அளவில் கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கி, ஆக்சிஜனை பெருமளவில் வெளியிட்டு, மனிதர்களின் நல்வாழ்வுக்கு துணை செய்யும் தன்மையுடையதாகையால், ஆடாதோடையை "ஆயுள் மூலிகை" என அழைப்பர்..

மனிதர்களின் நோயணுகா வாழ்வுக்கு நல்ல சுவாசமே, தீர்வாகும். நல்ல சுவாசத்திற்கு, நுரையீரலின் செயல்பாடு இன்றியமையாததாகும். நுரையீரல் என்பது மனிதனின் சுவாசம் மூலம் வரும் காற்றிலிருந்து, ஆக்சிஜனை பிரித்து உடலில் பரவவைத்து, கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றும். சீராக இயங்கும் நுரையீரலே, இரத்தத்தை சுத்திகரித்து, மனித உடல் ஆயுளை அதிகரிக்கும் தன்மை வாய்ந்தது. அத்தகைய நுரையீரலில் நெடுநாட்களாக சளி தேங்கி, நுரையீரல் பாதிப்படைவதாலேயே, ஆஸ்துமா, இருமல் உள்ளிட்ட சுவாச பாதிப்புகள் ஏற்பட்டு, உடல் நலம் கெடுகின்றன. அத்தகைய பாதிப்புகளை நீக்கி, நுரையீரலில் தேங்கியுள்ள சளியை அகற்றி, சுவாசத்திற்கு உறுதுணை புரிந்து, நீண்ட ஆயுளை அடையவைக்கும் அற்புத மூலிகை, இந்த ஆடாதோடை மூலிகை.
"ஆடாத உடலும் ஆடும், பாடாத வாயும் பாடும்" எனும் சித்தர்களின் வாக்குக்கேற்ப, ஆடாதோடை மூலிகையை முறையாக, உண்டுவர, உடல் நலம் தேறி, மனதில் உற்சாகம் பிறக்கும்.

கிராமங்களில், வயல் ஓரங்களில் வேலியை காக்கும் செடியாக, ஆடாதோடை அவற்றின் பசுமையான இலைகளை, கசப்புத்தன்மை காரணமாக, கால்நடைகள் உண்ணாததால், அதிக அளவில் பயனாகிறது. சாலையோரங்களில் அதிக அளவில் காணப்படும், ஆடாதொடா செய்லன்சியா எனும் தாவரவியல் பெயர்கொண்ட ஆடாதோடை. இலை, செடிகளின் பட்டை, வேர் மற்றும் இதன் மலர்களும் மருத்துவ குணங்கள் நிரம்பியவை.

பொதுவான மருத்துவ குணங்களாக, கோழை எனும் சளியை அகற்றும், வயிற்றில் உள்ள நுண்ணிய புழுக்களை அழிக்கும், சிறுநீரை அதிகரித்து, உடல் வழிகளை போக்கும் தன்மைகள் மிக்கது.
ஆடாதோடையில் உள்ள முக்கிய சத்தான வாசிசின், நுரையீரலில் உள்ள செல்களை சரிசெய்து, நுரையீரலின் சுருங்கி விரியும் தன்மையை சீராக்குவதால், ஆஸ்துமா, இருமல் சளி போன்ற சுவாசக்கோளாறுகளை சரியாக்குகிறது.
மேலும், ஆடாதொடையில் வைட்டமின் C சத்தும், வாசினால், ஆடாதோடின் மற்றும் கேலக்டோஸ் எனும் வேதிப்பொருள்களும் அதிக அளவில் உள்ளன.

மார்பு வலிகளுக்கு ஆடாதோடை முதலுதவி:

உடலில் அதிக சளித்தொல்லைகள் காரணமாக, உடல் தசைகளில் வலி ஏற்படும், அந்த வலிகளைப் போக்க,ஆடாதோடை இலைகளை பொடியாக்கி, நீரில் கலந்து பருகிவர,தசை வலிகள் யாவும் விலகிவிடும்.
எதிர்பாராத விதமாக மார் பயன்படுத்தும் முறைதொகு
ஆடாதோடை இலைகளைச் சுரசம் செய்து (அதாவது அரைத்துப் பிழிந்து வடிகட்டிய சாற்றை, இரும்புக் கரண்டியைச் சூடாக்கிஅதில் தோய்த்து, தோய்த்து சூடாக்குவது) கால் முதல் அரை தேக்கரண்டி தேன் கூட்டி தினமும் இரண்டு மூன்று வேளை கொடுக்க கப சம்பந்தமான நோயைக் குணபடுத்தும்...இந்த சுரசத்தையே அதிகயளவில் கொடுத்தால் வாய்க்குமட்டி வாந்தியாகி கபம் முழுதும் வெளிப்படும்...மற்றொரு முறையாக, ஒன்று இரண்டு தோலா எடையுள்ள ஆடாதோடை இலைகளை குறுக்க நறுக்கி ஒரு பழகிய மட்பாண்டத்தில் போட்டு கால் படி நீர் விட்டு வீசம் படியாகச் சுண்டக்காய்ச்சி வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்சு வீதம் தினமும் இரண்டு வேளை சிறிது திப்பிலிச்சூரணமும்,தேனும் கூட்டிக் கொடுத்துவர இரத்தம் தூய்மையாகும், கபம் கரையும், கஷ்ட சுவாசம் நிவர்த்தியாகும்...குழந்தைகட்கு வயதுக்குத் தக்கவாறு ஆடாதோடை சுரசத்தை பத்து முதல் இருபது துளிகள் தேனுடன் கலந்து கொடுக்கலாம்...இந்த மூலிகை பித்த சீதளத்தை மிக விரைவில் குணப்படுத்தும் தன்மையுள்ளதாகையால் சுரநோய்கட்கும் சிறப்பாக ஆடாதோடை கியாழம் செய்து பயன்படுத்துவர்.




Monday 10 December 2018

திருப்பாவை பாடல் 30




திருப்பாவை பாடல் 30

வங்கக்கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை அணி புதுவை
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன
சங்கத்தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்து செல்வத்திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

பொருள்:

அலைகள் நிறைந்த பாற்கடலைக் கடைந்த மாதவனும், கேசி என்ற அரக்கனைக் கொன்ற கேசவனுமான கண்ணனை, சந்திரனைப் போன்ற அழகு முகம் கொண்ட அணிகலன் அணிந்த பெண்கள் சிரமப்பட்டு தரிசித்து, பாவை விரத பலன் பெற்ற விபரத்தை ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த, குளிர்ந்த தாமரை போன்ற முகத்தையுடைய பெரியாழ்வாரின் பெண்ணான ஆண்டாள், இனிய தமிழில் முப்பது பாடல் பாடி பாமாலை தொடுத்திருக்கிறாள். இதனை படிப்பவர்கள், உயர்ந்த தோள்களை யுடையவனும், அழகிய கண்களைக் கொண்ட திருமுகத்தை உடையவனும், செல்வத்துக்கு அதிபதியுமான திருமாலின் ஆசியுடன் எங்கு சென்றாலும் செல்வச்செழிப்பு பெற்று இன்பமுடன் வாழ்வர்.