திருப்பாவை
பாடல் 8
கீழ்வானம்
வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான்
பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான்
போகின்றாரை போகாமல் காத்துன்னை
கூவுவான்
வந்துநின்றோம் கோது கலமுடைய
பாவாய்!
எழுந்திராய் பாடிப் பறைகொண்டு
மாவாய்
பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி
தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆஆ
என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.
பொருள்:
மகிழ்ச்சியை
மட்டுமே சொத்தாகக் கொண்ட சிலை போன்று அழகு கொண்ட பெண்ணே! கிழக்கே வெளுத்துவிட்டது.
எருமைகள் மேய்ச்சலுக்காக பசும்புல் மைதானங்களில் பரந்து நிற்கின்றன. அநேகமாக, எல்லாப் பெண்களும் நீராடுவதற்காக வந்து
சேர்ந்து விட்டார்கள். அவர்கள், உடனே
குளிக்கப் போக வேண்டும் என அவசரப்படுத்துகிறார்கள். அவர்களை உனக்காக தடுத்து
நிறுத்தி விட்டு, உன்னைக் கூவிக் கூவி அழைக்கிறோம். கேசி
என்னும் அரக்கன் குதிரை வடிவில் வந்த போது அதன் வாயைப் பிளந்து கொன்றவனும், கம்சனால் அனுப்பப்பட்ட முஷ்டிகர்
உள்ளிட்ட மல்லர்களை வென்றவனும், தேவாதி
தேவனுமாகிய ஸ்ரீகிருஷ்ணனை நாம் வணங்கினால், அவன்
“ஆஆ என்று அலறிக்கொண்டு நமக்கு அருள்
தருவான். பெண்ணே! உடனே கிளம்புவாயாக.
விளக்கம்:
திவ்ய
தேசமான சின்னக்காஞ்சிபுரம் (அத்திகிரி) வரதராஜப் பெருமாளை எண்ணி இப்பாடலை ஆண்டாள்
பாடுகிறாள். தேவாதி தேவன் என்று இங்குள்ள பெருமாளைக் குறிபபிடுவர். கண்ணனின்
வீரச்செயல்கள் இப்பாடலில் புகழப்படுகின்றன. பெண்கள் தைரியசாலிகளையே
விரும்புவார்கள் என்பது இப்பாடலின் உட்கருத்து.
No comments:
Post a Comment