திருப்பாவை
பாடல் 10
நோற்றுச்
சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும்
தராரோ? வாசல் திறவாதார்
நாற்றத்
துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப்
பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின்
வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும்
உனக்கே பெருந்துயில் தந்தானோ?
ஆற்ற
அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய்
வந்து திறவேலோர் எம்பாவாய்.
பொருள்:
முற்பிறவியில்
எம்பெருமான் நாராயணனை எண்ணி நோன்பிருந்ததன் பயனாக, இப்போது சொர்க்கம் போல் சுகத்தை அனுபவிக் கின்ற பெண்ணே! உன்
இல்லக்கதவை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. பேசவும் மாட்டாயோ? நறுமணம் வீசும் துளசியை தலையில் அணிந்த
நாராயணனை நாம் போற்றி பாடினால் அவன் நம் நோன்புக்குரிய பலனை உடனே தருவான்.
முன்னொரு காலத்தில், கும்பகர்ணன் என்பவனை தூக்கத்திற்கு
உதாரணமாகச் சொல்வார்கள். உன் தூக்கத்தைப் பார்த்தால், நீ அவனையும் தோற்கடித்து விடுவாய் போல்
தெரிகிறது. சோம்பல் திலகமே! கிடைத்தற்கரிய அணிகலனே! எந்த தடுமாற்றமும் இல்லாமல்
கதவைத் திறந்து வெளியே வா.
விளக்கம்:
யாராவது
நன்றாகத் தூங்கினால் “சரியான கும்பகர்ணன் என்று சொல்வோம்.
இது ஆண்டாள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்ன “ஜோக் என்பதை இந்தப் பாடல் தெளிவுபடுத்துகிறது. நகைச்சுவை உணர்வு
ஆயுளை அதிகரிக்கும். வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும் என்பார்கள்.
ஆண்டாள் நமக்கு திருப்பாவையின் மூலம் ஆயுள்விருத்தியைத் தந்திருக்கிறாள்.
No comments:
Post a Comment