Wednesday 10 October 2018

நவராத்திரியின் சிறப்பம்சமும் வழிபடுமுறையும்




நவராத்திரியின்  சிறப்பம்சமும்  வழிபடுமுறையும்

நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலு என்பது பல படிகளை கொண்ட மேடையில் பலவித பொம்மைகளை நேர்த்தியாக அலங்கரித்து வைப்பதேயாகும். ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற்கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றா. இனி நவராத்திரி கொலு எப்படி அமைக்கவேண்டும் என்று பார்ப்போம். கொலுமேடை 9 படிகள் கொண்டதாக இருக்கவேண்டும். 
         
நவராத்திரி வழிபாட்டு முறை.

1.முதலாம் நாள் :

சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும்.தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம்செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபக்காரி.நீதியைக்காக்கவே இவள் கோபமாக உள்ளாள். மற்றும் இவளது கோபம் தவறுசெய்தவர்களை திருத்தி நல்வழிபடுத்தவே ஆகும்.

முதலாம் நாள் நைவேத்தியம் : பொங்கல் அத்துடன் பாசிப்பயிறு சுண்டல்.

2. இரண்டாம் நாள் :

இரண்டாம் நாளில் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபடவேண்டும். வராஹ(பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும்ஆயுதங்கள் ஆகும். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமியைதூக்கியிருப்பவள். இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்றதிருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள். ஏவல், பில்லி சூனியம்,எதிரிகள் தொல்லையிலிருந்து விடுபட இவளின் அருளைப் பெறுவது அவசியம்.

.இரண்டாம் நாள் நைவேத்தியம் :-தயிர்ச்சாதம் அத்துடன் மொச்சை சுண்டல்.

3. மூன்றாம் நாள் :

மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திராணியாக வழிபடவேண்டும். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செயபவளும் இவளேயாகும். பெரிய பெரிய பதவிகளை அடையவிரும்புபவர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும். மற்றும் வேலையில்லாதவரிற்கு வேலை கிடைக்கஇ பதவியில் உள்ளவரிற்கு பதவியுயர்வுஇ சம்பள உயர்வு கிடைக்க அருள் புரிபவளும் இவளேயாகும்.    
          
மூன்றாம் நாள் நைவேத்தியம் :-வெண்பொங்கல் அத்துடன் காரமணி சுண்டல்
.
4. நான்காம் நாள் :

சக்தித்தாயை இன்று வைஷ்ணவி தேவியாக வழிபடவேண்டும். சங்குஇ சக்கரம்இ கதைஇ வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன்.

நான்காம் நாள் நைவேத்தியம்எலுமிச்சை சாதம்அத்துடன் பட்டாணி சுண்டல்.

5. ஐந்தாம் நாள் :

ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும்.அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடபவாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வமங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனைபெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.

.ஐந்தாம் நாள் நைவேத்தியம்புளியோதரை அத்துடன் சிகப்பு துவரை சுண்டல்..

6. ஆறாம் நாள் :

இன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். மயில்வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்குஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தைதருபவள்.

ஆறாம் நாள் நாள் நைவேத்தியம் :-தேங்காய்ச்சாதம் அத்துடன் பச்சைப்பயறு சுண்டல்

7. ஏழாம் நாள் :

ஏழாம்நாள் அன்னையை மகாலட்சுமியாக வழிபடவேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்திஇ கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். விஷ்ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐசவரியங்களையும் தருபவள் அன்னையாகும்.
.
ஏழாம் நாள் நைவேத்தியம்: கல்கண்டு சாதம் அத்துடன் கடலைபருப்பு சுண்டல்.

8. எட்டாம் நாள் :

இன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உடலும்இ சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்குஇ சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.

எட்டாம் நாள் நைவேத்தியம் :சர்க்கரைப் பொங்கல் அத்துடன் கொண்டக்கடலை சுண்டல்.

9. ஒன்பதாம் நாள் :

இன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழிபடவேண்டும். அன்ன வாகனத்தில்இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமானவள். கல்விச்செல்வம் பெறஅன்னையின் அருள் அவசியமாகும்.

ஒன்பதாம் நாள் நைவேத்தியம் :அக்கர வடசல் கதம்பச்சுண்டல் சுண்டல்..

No comments:

Post a Comment