Wednesday 10 October 2018

நவராத்திரி கொலு வைக்கும் முறைகள்



நவராத்திரியின் சிறப்பம்சம் கொலு வைப்பதேயாகும். இதன் தத்துவம் தாமச குணம், ரஜோ குணம், சத்துவ குணம் ஆகிய மூன்று குணங்களையும் குறிக்கும். முதல் இரண்டு குணங்களைக் கடந்து சத்துவ குணத்தை அடையும் வழியையே இந்த நவராத்திரி கொலுப்படிகள் நமக்கு உணர்த்துகின்றன. இனி நவராத்திரி கொலு எப்படி அமைக்க வேண்டும் என்று பார்ப்போம்.
1. முதலாம் படியில்  : ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகள் வைக்கவேண்டும்.
2. இரண்டாம் படியில்  : ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் வைக்கவேண்டும்.
3. மூன்றாம் படியில்  : மூன்றறிவு உயிர்களான கரையான், எறும்பு போன்றவற்றின் பொம்மைகள் வைக்கவேண்டும்.
4. நாலாம் படியில்  : நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு போன்றவற்றின் பொம்மைகள் வைக்கவேண்டும்.
5. ஐந்தாம் படியில்  : ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகியவற்றின் பொம்மைகள வைக்கவேண்டும்.
6. ஆறாம் படியில்  : ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள் வைக்கவேண்டும்.
7. ஏழாம் படியில்  : மனித நிலையிலிருந்து உயர்நிலையை அடைந்த சித்தர்கள், ரிஷிகள், மகரிஷிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள் வைக்கவேண்டும்.
8. எட்டாம் படியில்  : தேவர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் மற்றும் தேவதைகளின் பொம்மைகள் வைக்கவேண்டும்.
9. ஒன்பதாம் படியில்  : பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் வைக்கவேண்டும்.
மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலையை அடைய வேண்டும்என்பதற்காகவே இப்படி கொலு அமைப்பது வழக்கம்.

No comments:

Post a Comment