Saturday 3 March 2018


புதினா சாப்புடுவதால் வரும் நன்மைகள்:





புதினா கீரையில் நீர்ச்சத்துபுரதம்கொழுப்புகார்போஹைடிரேட்நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள்பாஸ்பரஸ்கால்சியம்இரும்புச்சத்துவைட்டமின் நிக்கோட்டினிக் ஆசிட்ரிபோ மினேவின்தயாமின் ஆகிய சத்துக்களும் அடங்கியுள்ளனசட்னிஜூஸ் எந்த விதத்தில் இதை பயன்படுத்தினாலும் இதன் பொது குணங்கள் மாறுவதில்லை என்பது இதன் முக்கிய அம்சம்.அசைவ உணவு மற்றும் கொழுப்பு பொருட்களை எளிதில் ஜீரணமாக்குகிறதுஇரத்தம் சுத்தமாகும்வாய் நாற்றம் அகலும்பசியை தூண்டும்மலச்சிக்கல் நீங்கும்பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது.

ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றதுவயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றதுவாய்வுத் தொல்லையை அகற்றுகின்றதுபுதினாவை நீர் விடாமல் அரைத்து வெளி உபயோகமாகப் பற்றுப் போட்டால்தசைவலிநரம்புவலிதலைவலிகீல்வாத வலிகளின் வேதனை குறையும்ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது.மஞ்சள் காமாலைவாதம்வறட்டு இருமல்சோகைநரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறதுமுகப்பரு உள்ளவர்களும்வறண்ட சருமம் உள்ளவர்களும் இதன் சாரை முகத்தில் தடவி வர பலன் கிடைக்கும்.

புதினாவை நிழலில் காயவைத்து பாலில் சேர்த்து கொதிக்கவைத்து டீக்குப் பதிலாக அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்புதினாக்கீரை கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த ஒரு கைகண்ட மருந்தாக இருந்து வருகிறது.

புதினாவை நிழலில் உலர்த்தி வைத்துக் கொண்டு நீர் சேர்த்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை கொடுத்து வந்தால் காய்ச்சல் தணியும்மூச்சுத்திணறல் நிற்க புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் இந்த நீரை குடித்தால் மூச்சுத்திணறல் நீங்கும்.புதினா சாறுபூண்டு சாறுஎலுமிச்சை சாறு இவைகளை கலந்து கூந்தலில் தடவி ஊற வைத்து . சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகுக்கு மறைந்துவிடும்கூந்தலும் பட்டுபோல் பளபளக்கும்.

புதினா கஷாயம் தயாரிக்கும் முறை:

25 கிராம் புதினா இலையை 500 மில்லி தண்ணீர் விட்டு நன்கு வேகும் வரை கொதிக்க வைத்து வடிகட்டிய கஷாயத்தில் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கலந்து 60 மில்லி அளவு தினம் இரண்டு வேளை சாப்பிட்டால் செரிமானக் குறைவு நிவர்த்தியாகும்கைகால் மூட்டுக்களில் ஏற்பட்ட வலிகள் குறைந்து விடும்.

புதினா ஜூஸ் தயாரிக்கும் முறை:

வெயிலில் நிழலான இடத்தில காயவைத்து புதினா இலையை எடுத்து கொள்ளவேண்டும்தண்ணீரில் இஞ்சிஉப்புசர்க்கரை ஆகியவற்றை சில நிமிடம் கொதிக்க விடவும்சர்க்கரை கரைந்து தண்ணீர் தயாரான பிறகு புதினா இலைகளைச் சேர்த்து மறுபடியும் கொதிக்க விடவும்சில நிமிடங்கள் கொதிக்க வைத்து அடுப்பிலிருந்து இறக்கிஇதை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்அதன்பின் இந்தக் கலவையை வடிகட்டிஎலுமிச்சை சாறு சேர்க்கவும்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை அருந்தி வரலாம்.

புதினா பல்பொடி தயாரிக்கும் முறை:

புதினா இலைகளை வெயிலில் நன்றாக காயவைத்து அதனுடன் அதன் அளவில் எட்டில் ஒரு பங்கு உப்பு சேர்த்து தூள் செய்து சலித்து பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும்.

இந்த பொடியை வைத்து தினசரி பல் தேய்த்து வந்தால் வாழ்நாள் முழுவதும் பல் சம்பந்தமான எந்த ஒரு நோயினாலும் பாதிக்கப்படமாட்டார்பற்கள் வெண்மையாக ஜொலிக்கும்ஈறுகளில் இரத்தம் வருவதுவாய் துர்நாற்றம் போன்றவை நீங்கும்.

புதினாக் கீரையை தொட்டிகளில் எளிதாக வளர்க்கலாம்கடையில் வாங்கி வரும் புதினாக் கீரையில் இலைகளைப் பயன்படுத்தி விட்டுத் தூர எறியும் தண்டுகளை தொட்டி மண்ணில் ஊன்றி வைத்தால் போதும்கைக்கெட்டிய தூரத்தில் புதினா மூலிகை கிடைக்கும்.புதினா அனைத்துக்கும் தீர்வு தரும் காயகல்பம்எனவே அனைவரும் வீடுகளில் புதினாவை வளர்த்து நம் உணவில் சேர்த்து ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம்.

மேலும் இதுபோன்ற பயனுள்ள பதிவுகளை அறிய  வேல் டிவியை
subscribe செய்யவும் நன்றி !!!
********************************************************
Please Follow As In

Youtube: https://goo.gl/nU7en9

Facebook: https://goo.gl/SN7SWS

Blogger: https://goo.gl/SJHvh3

******************************************************************


No comments:

Post a Comment