Friday 16 March 2018

சின்ன சின்ன கை வைத்தியங்கள்


சின்ன சின்ன கை வைத்தியங்கள் !!!

முதலில் நம் பார்க்க போவது தீராத விக்கலை நிறுத்த எளிய வலி

1. 30 வினாடிகள் இரு காது துவாரங்களையும் விரல்களால் அடைத்துக்கொள்ளுங்கள்.. பிறகு  தீராத விக்கல் நின்று போகும் அல்லது! சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையை  வாயில் போட்டு சுவையுங்கள். பறந்து போகும் விக்கல்!.

2. கொட்டாவியை நிறுத்த எளிய வலி
கொட்டாவி வருவதற்கான காரணம்: Oxigen பற்றாக்குறை தான் அதனால் நான்கு அல்லது ஐந்து தடவை, நன்கு மூச்சை இழுத்து விடுங்கள் கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகி விடுவீர்கள்!

3. உடல் துர் நாற்றத்தைப்போக்க
குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில்
ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை கலந்து பிறகு குளிக்கவும் அவ்வளவு தான் நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!

4. வாய் துர்நாற்றத்தால் சங்கடமா
எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும், வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர்நாற்றம் நீங்கும்.

5. வியர்வை கட்டி தொல்லையா

வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்
.
நீர்க்கோவை, தலைபாரம் போக்க

6. நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

7.சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.

ஜலதோஷம் போக்க
8. சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.

இருமலை போக்க
9. புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும்.

10. சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.

11. பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.


No comments:

Post a Comment